“நான் தான் களவாணி” ; தயாரிப்பாளர்-இயக்குனர் கடும் மோதல்..!


ஒரு படம் ஹிட்டானபின் அதன் இரண்டாம் பாகத்தை சில வருடங்கள் கழித்து இயக்குனரும் தயாரிப்பாளரும் தனித்தனியே எடுக்கும்போது அந்த டைட்டில் இயக்குனருக்கு சொந்தமா, இல்லை தயாரிப்பளருக்கு சொந்தமா..? இப்படி ஒரு குடுமிப்பிடி சண்டைதான் ‘களவாணி-2’ தொடர்பாக நடந்துகொண்டு இருக்கிறது.

விமல் ஓவியா நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன் வெளியான ‘களவாணி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் சற்குணமே படத்தை தயாரிக்க முடிவு செய்து K2 என தலைப்பிட்டு படத்தை ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீர் என்பவர் தான் தனது ஷெராலி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்தார். ஆனால், இயக்குனர் சற்குணம் தன்னிச்சையாக படத்தின் தயாரிப்பாளருக்கு தெரியாமல் கமுக்கமாக இரண்டாம் பாக வேளைகளில் இறங்கிவிட்டார்.

இதனால் அதிர்ச்சியான நசீர், களவாணி தலைப்பு என்னிடம் உள்ளது. நீங்கள் K2 என்ற பெயரை மாற்றி எடுத்தாலும் சரி. நான் களவாணி 2 படத்தை தயாரித்தே தீருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கொடுத்து விட்டார்.

ஆனால் இயக்குனர் சற்குணமோ முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஓவியா உள்ளதால் படம் நிச்சயம் 10-20 கோடி வசூல் செய்யும். படத்தின் பட்ஜெட் 5 கோடி என்றாலும் பாதிக்கு பாதி லாபம் பார்க்கலாம் என்ற கணக்கு போட்டு K2 என தலைப்பை வைத்து தானே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.

ஆக படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல இயக்குனர் சற்குணம் களவாணி வேலையை பார்த்துவிட்டார் என்றே முதல் பட தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.