கமலுக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் ஒரேவிதமான சிக்கல்..!

சில மாதங்களுக்கு முன் படு சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட படம் தான் கமல் நடிப்பில் உருவான ‘சபாஷ் நாயுடு’.. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் தான் இந்தப்படத்தையும் இயக்கினார்.. ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கமலின் காலில் அடிபட்டு அவர் சிகிச்சையும் ஓய்வும் எடுக்க நேர்ந்தது.. அதனால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது..

ஆனால் இப்போது கமலின் கால் குணமாகி அவர் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார். ஆனால் இந்தப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள் வேறு வேறு படங்களில் பிசியாக இருக்கிறார்கள்.. அனைவரையும் ஒன்று சேர்த்து படப்பிடிப்பை மீண்டும் துவங்குவது என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

கமல் படத்துக்கு இப்படி சிக்கல் என்றால், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இதேபோல வேறுவிதமான சிக்கல்.. அதாவது சந்தானத்தை வைத்து படம் இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ், வடிவேலுவை வைத்து ஒரு புதிய படத்தை ஆரம்பித்தார் அல்லவா..? தற்போது அந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தப்படத்தில் இருந்து விலகிக்கொண்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம்.. இனி இன்னொரு தயாரிப்பாளர் கிடைத்தால் தான் படப்பிடிப்பு மேற்கொண்டு துவங்குமாம்.