விஸ்வரும் கமல் எஸ்கேப் ; ஆனால் தயாரிப்பாளர்..?


பல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான விஸ்வரூபம் படம் இன்று வெளியாகியுள்ளது. கமலுக்கே சம்பள பாக்கி இருந்ததால் தான் அதைக்கூட செட்டில் செய்ய முடியாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஆனால் கமலோ பட ரிலீசுக்கு முன் புத்திசாலித்தனமாக இந்தப்படத்தின் மற்ற மொழி சாட்டிலைட் உரிமையை தனது சம்பளத்திற்கு பதிலாக எழுதி வாங்கிக்கொண்டதால் அவர் எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மதுரை, தென்னாற்காடு பகுதிகளில் கூட படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் படத்திற்கும் வரவேற்பு கிடைக்காத நிலையில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் போட்ட காசை எடுத்து தருமா என்பது சந்தேகம் தான்.