கௌதம் மேனன் கொடுத்த அல்வா.. கார்த்திக் நரேன் கொடுத்த கல்தா..!


ரகுமான் நடித்த துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அந்த படம் ஆரம்பித்த சமயத்திலும், வெளியான நேரத்திலும், இயக்குனர் கௌதம் மேனன் அவருக்கு ஆதரவாக சில வேலைகளை செய்து கொடுத்தார்.

தற்போது நரகாசூரன் என்கிற படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் அந்தப்படத்தையும் தானே தயாரித்துள்ளார். ஆனால் கௌதம் மேனன் மேல் கொண்ட விசுவாசம் காரணமாக நரகாசூரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து தயாரித்துள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவே இப்போது கார்த்திக் நரேனுக்கு பெரிய சிக்கலை இழுத்து கொண்டுவந்து விட்டது.

இந்தப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் நரகாசூரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் கௌதம் வாசுதேம் மேனன் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கெளதம் மேனன் மீது அதிருப்தியில் இருக்கிறாராம் கார்த்திக் நரேன்.

நரகாசூரன் படத்தின் தயாரிப்பிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனை விலக்கிவிட்டு தானே வியாபாரத்தை முடித்து படத்தை வெளியிட கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.