ஹீரோ பிடிக்காமலேயே படத்தை இயக்கினேன்” – மேடையில் ஓப்பனாக பேசிய அறிமுக இயக்குனர்..!

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்தவர் தான் ‘ரஜினி’ ஜெயராமன்.. இவர் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘கிருமி’. மதயானை கூட்டம் கதிர் ஹீரோ. கதாநாயகி ரேஷ்மி மேனன். ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பு முடித்துள்ள அனுசரண் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

இந்தப்படத்தின் கதாநாயகன் கதிர் ‘மதயானை கூட்டம்’ படத்திற்கு பின் கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டு, அதற்குப்பின் ஒப்புக்கொண்ட படமாம் இது. ஆக, கதை பிடித்துப்போனதால் அவருக்கு வேண்டுமானால் அது சந்தோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் இயக்குனர் அனு சரணுக்கோ, கதிரை தனது முதல் படத்தின் ஹீரோவாக நினைத்து பார்க்கவே முடியவில்லையாம்..

ஹீரோ பிடிக்காமல் தான் படம் முழுவதும் இயக்கியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த ஹீரோ முன்னிலையிலேயே ஓப்பனாக பேசி அதிர்வை ஏற்படுத்தினார் அனு சரண்.. பின் இந்த ஹீரோவை வைத்து படம் இயக்க ஒப்புக்கொண்டது ஏன்..? அனுசரணின் பெற்றோர்கள் அவரிடம் கதிரை ஹீரோவாக வைத்து படம் இயக்கும்படி கெஞ்சி கேட்டுக்கொண்டதால், வேறுவழியின்றி படத்தை இயக்கியுள்ளாராம்.

அனுசரனின் பெற்றோர்கள் கதிருக்காக சிபாரிசு செய்யவேண்டிய அவசியம் என்ன, அதி அனுசரண் ஒப்புக்கொண்டது ஏன் என்பதெல்லாம் திரைமறைவு ரகசியங்கள்.. ஒருவேளை படம் வெளியான பின்னர் அதன் ரிசல்ட் நெகட்டிவாக இருந்தால் ஹீரோவின் தலைதான் உருளப்போகிறது என்றே தெரிகிறது.