இரண்டாவது முறையாக இணையும் பையா டீம்!!!!

முரடனாக வலம் வந்த கார்த்தியை, சாக்லேட் பாயாக காட்டிய படம் “பையா”. தமன்னாவின் அழகு மற்றும் யுவனின் இசை படத்திற்க்கு சாதகமாக அமைந்திருந்தது.

பையா திரைப்படம் கார்த்தியின் சினிமா பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு கார்த்தி மற்றும் லிங்குசாமி, அவரவர்களின் துறையில் பிஸியாகிவிட்டனர்.

தற்போது இவர்கள் மீண்டும் இணையபோவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் புதிய ஹீரோயின் கார்த்தியுடன் ஜோடி சேர்வதாக தெரியவந்துள்ளது.
மேலும் தான் “சண்டகோழி 2” இயக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர்.

2015 லிங்குசாமிக்கு ஒரு பரபரப்பான வருடமாகவே அமையவிருக்கிறது .