குடிபோதையில் நாசரை கன்னத்தில் அறைந்த மாதவன்..!


மாதவன் நீண்ட நாள் கழித்து மீண்டும் ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக தமிழுக்கு வந்துள்ளார்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் வரும்போதே சர்ச்சைகளையும் சேர்த்தே கொண்டுவந்தவர் போல வாரத்துக்கு ஒன்றாக ஏதாவது ஒரு சர்ச்சை அவரை மையப்படுத்தி சுழன்றடிக்கிறதே..

ஒரு தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவுக்கு முத்தம் கொடுக்க அதை ஒரு பக்கம் கலாச்சார காவலர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.. அது அடங்குவதற்குள் ‘இறுதிச்சுற்று’ மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி அவர் குடித்துவிட்டு கலாட்டா பண்ணுவதாக வெளியாகி ‘என்னப்பா.. இப்டி பண்றீங்களேப்பா’ என சொல்ல வைத்துள்ளார்..

சும்மா தண்ணியடித்து விட்டு சலம்பல் பண்ணவில்லை. படத்தின் ஒரு காட்சியில் மாதவனும் நாசரும் பாரில் குடிப்பதுபோல இருக்கிறது. குடிப்பதுபோலநடித்தால் நன்றாக இருக்காது என நினைத்த மாதவன் ஒரிஜினல் சரக்கை அடித்துவிட்டு அங்கும் இங்கும் அலைபாயுகிறார்.. கூடவே நாசருக்கும் அவ்வப்போது கன்னத்திலும் தோளிலும் ரெண்டு போடுகிறார்..நாசரும் வேறுவழியில்லாமல் அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

என்னமோ போங்க மாதவா..!