மேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்


தென்னிந்திய சினிமாவின் மூத்த மேக்கப்மேனும், ரஜினியின் ஆஸ்தான மேக்கப்மேனுமான முத்தப்பா சமீபத்தில் காலமானார் அவரது மறைவு செய்தி கேள்விப்பட்ட ரஜினிகாந்த் உடனே அவர் இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார் .

மேக்கப்மேன் முத்தப்பா எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் மேக்கப்மேனாக பணியாற்றியுள்ளார் ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிக்கு மட்டுமே ஆஸ்தான மேக்கப் மேனாக மாறி விட்டார் தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை என ரஜினியுடன் 25 படங்களுக்கு மேல் சின்ன சின்ன நடித்துள்ள முத்தப்பா ரஜினியின் நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டவர். ரஜினி அவருக்கு எந்தளவுக்கு மரியாதை கொடுப்பார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணத்தை பார்க்கலாம்.

தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் முத்தப்பாவை தனது இல்லத்திற்கு வரவழைத்து அறுசுவை விருந்து அளிப்பது வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி ஆனால் நீண்ட நாளாகவே முத்தப்பாவின் மனைவிக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது என்னதான் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வீட்டிற்கு அழைக்கிறார் என்றாலும் அங்கே தனது கணவரை எப்படி நடத்துவார்கள் என்கிற எண்ணம் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது இது எப்படித்தான் ரஜினி புரிந்துகொண்டாரோ தெரியவில்லை..

ஒருமுறை முத்தப்பாவை விருந்துக்கு அழைத்த ரஜினி, தனது மனைவியை லதாவை வைத்து தனக்கும் அவருக்கும் சாப்பாடு பரிமாற செய்தார் அருகில் இருந்த நபர் மூலம் தாங்கள் சாப்பிடுவதை புகைப்படம் எடுக்கவும் செய்தார் ரஜினி. முத்தப்பா வீட்டிற்கு திரும்பி செல்வதற்குள் அவரது மனைவிக்கு அந்த புகைப்படம் வந்து சேர்ந்து சேர்ந்துவிட்டது ரஜினி வீட்டில் தனது கணவரை சரிக்கு சமமாக, மிகவும் பாசமாக நடத்துவதை பார்த்து பிரமித்துப்போனார் முத்தப்பாவின் மனைவி.

அதன்பின் ரஜினி அழைக்கும்போது தன் கணவர் செல்வதற்கு எப்போதுமே தடை சொல்வதில்லை இப்போது வரை ரஜினி வீட்டு விசேஷங்கள் அனைத்திலும் கலந்து கொள்வதற்கு வசதியாக, ரஜினி வீட்டில் இருந்து ஒரு கார் தயாராக முத்தப்பாவின் வீட்டுமுன் வந்து நின்றுவிடும் அந்த அளவிற்கு ரஜினியை தான் பெறாத ஒரு மகன் என்று எப்போதும் கூறுவார் அதுமட்டுமல்ல ரஜினியின் தந்தையை பெங்களூரில் சென்று அவரது வீட்டில் வைத்து நேரில் சந்தித்த வெகு சிலரில் முத்தப்பாவும் ஒருவர் அப்போது தனது தந்தையிடம் முத்தப்பா பற்றி கூறிய ரஜினி, உங்களைப்போலவே எனக்கு தமிழ்நாட்டில் கிடைத்த இன்னொரு தந்தை தான் இவர் என கூறி முத்தப்பாவை நெகிழ வைத்தாராம்