கட்டம் கட்டிய ரசிகர்கள் ; அதிர்ச்சியில் பார்வதி..!


தனது படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடிப்பதாக மம்முட்டியின் மீது சில நாட்களுக்கு முன்பு கடுமையான விமர்சனங்களை வைத்தார் மலையாள நடிகை பார்வதி. அதற்கு மம்முட்டி ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பிரச்சனையாக மாறி, அந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து மம்முட்டியும் தனது ரசிகர்களுக்கு ‘கண்ணியம் காக்கவேண்டும்” என எச்சரித்துள்ளார். ஆனால் எந்த நேரத்தில் மம்முட்டிக்கு எதிராக வார்த்தைகளை விட்டாரோ, தெரியவில்லை, கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சம்பாதித்து வருகிறார்

அதேசமயம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சூனா பானா வடிவேலு பாணியில், தான் தைரியமாக இருப்பதுபோல ஸ்டேட்மெண்ட் கொடுத்து சமாளிக்கிறார் பார்வதி.

சமீபத்தில் இவரும் பிருத்விராஜூம் ஜோடியாக நடித்துள்ள ‘மை ஸ்டோரி’ படத்தின் பாடல் யூ டியூப்பில் வெளியாகி கிட்டத்தட்ட 12 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டதை விட சுமார் ஒன்றரை லட்சம் நபர்களால் வெறுக்கப்பட்டுள்ளது (டிஸ்லைக்) அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு முழு காரணம் மம்முட்டி ரசிகர்கள் தான்.

இருந்தாலும் “இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பதே பெருமையான விஷயம். ஒவ்வொருவரின் உண்மையான முகங்கள் இப்போதுதான் வெளிப்பட்டு வருகின்றன. அமைதியாக உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே அனைத்தையும் கவனித்து வருகிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.

கொஞ்ச நாள் அமைதியாக இருந்தாலே அமுங்கிப்போய்விடக்கூடிய விஷயத்தை பார்வதிதான் பெரிதுபடுத்தி தூண்டிவிடுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.