இப்படி நடந்துடுச்சே ; கண்ணீர்விட்டு கதறிய சிம்பு பட நாயகி


மலையாளத்தில் அறிமுகமானாலும் கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன் இவர் நுழைந்த வேகத்தை பார்க்கும்போது தமிழில் பெரிய இடத்துக்கு வருவார் என்று பார்த்தால் கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார். கடந்த வருடம் இவர் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய இரண்டு படங்களும் இவருக்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை.

அதிலும் சத்ரியன் படத்தை தான் ரொம்பவே எதிர்பார்த்ததாக சொல்லும் மஞ்சிமா மோகன், படத்தை முதல் காட்சி தியேட்டரில் பார்த்ததும் அதிர்ந்துவிட்டாராம்..படம் ரிலீஸாவதற்கு முன்பு இருந்த வரவேற்பு அப்படியே மாறிப்போனதை கண்டு அதிர்ந்துபோன அவர், வீட்டிற்கு வந்து கதவை சாத்திக்கொண்டு குமுறிக்குமுறி அழுதாராம். அதன்பின் த்ரிஷாவுடன் போனில் பேசியபோது, அவர்தான், கவலைப்படாதே இதெல்லாம் கடந்துபோகும் என கூறி மஞ்சிமாவை ஆறுதல் படுத்தினாராம்.