மூணே மூணு வார்த்தை

‘மூணே மூணு வார்த்தை’…என்ன மந்திர வார்த்தைகள் இவை? ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனரும், தயாரிப்பாளருமான SP சரண் “ இது காலத்துக்கு காலம் மாறும்” என்கிறார்.

வித்தியாசமான திரைப்படங்களான மழை, சென்னை -600028, ஆரண்ய காண்டம், குங்கமப் பூவும் கொஞ்சும் புறாவும், நாணயம்சமிபத்தில் வெளிவந்து பெரும்வெற்றி பெற்ற ‘திருடன் போலீஸ்’ ஆகிய படங்களை தயாரித்த ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’’ நிறுவனத்தாரின் அடுத்த தயாரிப்பு ‘மூணே மூணு வார்த்தை’’ இதை இயக்குபவர் ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா.

“தரமான படங்கள் தயாரிக்க வேண்டுமென்பதுதான் என் லட்சியம். நல்ல தரமான, வித்தியாசமான இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு அதே மாதிரியான வித்தியாசமான கதைகளில் பேரார்வம் உண்டு. என்னுடைய படங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாக இருக்கும். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதிலும், விமர்சகர்களின் பாராட்டை பெறுவதிலும் எனது படங்கள் முதன்மையாக இருக்கும்.”
“ இந்த படத்தில் 5 முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம். என்னுடைய நிறுவனம் புதிய கலைஞர்களை உருவாக்கும் பட்டறையாக இருப்பது எனக்கு பெருமையே. இதுவரை என்னுடைய எல்லாப் படங்களிலும் புதிய இயக்குனர்கள் அறிமுகமானார்கள். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியவர். ஆயினும், தெலுங்கில் அவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.”

‘ ஒரு அறிமுக இயக்குனருக்கான புத்துணர்ச்சியோடும், துடிப்போடும் அவர் இயக்குவது படத்தின் வெற்றிக்கு உத்திரவாதம் தருகிறது. ‘மூணே மூணு வார்த்தை’ ஜனரஞ்சகமான நகைச்சுவை காதல் சித்திரம். இறுதிக்கட்ட படபிடிப்புகள் முடிந்து படம் வெளிவரும் தருவாயில் உள்ளது. தற்போது, நான் பிரயோகிக்கும் மூணே மூணு வார்த்தை “வீ ஆர் ரெடி” என்பதே’ என உற்சாகத்துடன் S.P.சரண் கூறினார்.