“இந்த தடவை நீயே பாரும்மா” ; ஒதுங்கிய த்ரிஷா..!


நிச்சயதார்தத்துடன் நின்றுபோன த்ரிஷாவின் திருமனத்தைப்ப்றி திரும்ப திரும்ப பேசுவதில் புண்ணியம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. அவரே அந்த வருத்தங்களை எல்லாம் மறந்து கொஞ்சநாள் அமைதியாக இருந்தார். ஆனாலும் திருமணத்திற்கான தேவையையும் அவர் உணர்ந்தே இருக்கிறாராம். ஆனால் தனது செலக்சன் தான் தோல்வியில் முடிந்துவிட்டதால் இந்தமுறை பொறுப்பை அம்மா கையில் கொடுத்துவிட்டாராம்.

“நான் சில நேரங்களில் அதுவா, இதுவா என முடிவெடுக்க முடியாமல் திணறும் தருணங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை என் அம்மாவிடம் விட்டு விடுவேன்.. அவர்கள் எனக்கு சரியானது என படும் முடிவை எடுப்பார்கள்.. அதுதான் இத்தனை வருடங்களாக நான் சினிமாவில் நீடித்திருக்க காரணமாகவும் இருக்கிறது. அதனால் அம்மாவே எனக்கேற்ற மாப்பிள்ளையை பார்க்கட்டும்.. அதுதான் சரியானதாக இருக்கும்” என தனது அம்மாவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டாராம்.