சூப்பர்ஸ்டாரை இயக்கியது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் தர்பார். வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என்று பெருமிதம் கொண்டுள்ளார். மேலும் அவர் பேசியதாவது,

நான் ரஜினியின் சீனியர் ஃபேன்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எம்ஜிஆர், ரஜினி வித்தியாசமானவர்கள்.

தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினியின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கள், என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே ரஜினி ரசிகன்.

நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். ஆனால், ரஜினியை இயக்கியது நிலவில் இறங்கியது போல் உள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான “நான்தாண்டா இனிமேலு நடந்து வந்தா தர்பாரு” என்ற ஓப்பனிங் சாங் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது.