“என் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுங்கள்” – தனுஷை அதிர வைத்த நயன்தாரா..!

தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்ததில் இருந்தே டீசன்டான நட்பு தொடர்கிறது. அதனால் தான் தன்னுடைய தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அழைத்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டார் நயன்தாரா.

இப்போது படப்பிடிப்பு முடிந்து, படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால் இந்தப்படத்தை ஆரம்பிக்கும் முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டை தாண்டி இப்போது செலவு தொகை வந்து நிற்கிறதாம்… இதனால் விக்னேஷ் சிவனை அழைத்து காரசாரமாக பேசினாராம் தனுஷ்..

இந்த தகவல் எப்படியோ நயன்தாரா காதுக்கு போனதாம். எப்படியோ என்ன எப்படியோ.. இந்தப்படத்தில் இணைந்து பணிபுரியும்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா காதாலகி கசிந்துருகியதுதான் நாடறிந்த விஷயமே… அதனால் இந்த தகவல் விக்னேஷ் சிவன் மூலமாகத்தான் நயன்தாராவுக்கு எட்டியிருக்கும்.

இந்த விஷயத்தை தெரிந்துகொண்டபின் தனுஷை நேரில் சந்தித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொடுத்த பட்ஜெட்டைவிட எவ்வளவு தொகை அதிகமாக செலவானதோ அந்த தொகையை தன் சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டாராம்.

இதைக்கேட்டு ஒருகணம் அதிர்ந்த தனுஷ், இதன் பின்னணியில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு உள்ள காதலை உணர்ந்து சாந்தமாகி விட்டாராம்.. பணத்தை பிடிப்பாரா இல்லை கரத்தை பிடித்தாரா என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம்..