நயன்தாரா எதற்காக பயந்தாரா அது நடக்கும் நேரம் வந்துருச்சு..!

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ‘வேலைக்காரன்’ படம் தவிர்த்து தான் நடிக்கும் மற்ற படங்களில் கதையின் நாயகியாக மட்டும் நடித்து வருகிறார் அல்லவா..? அதற்கு காரணம் அவர் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதால், இனி ஹீரோக்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாட விரும்பவில்லை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அது இல்லையாம்.

என்னதான் இளமையான வேடங்களில் நடித்தாலும் மனதை இளமையாக வைத்திருந்தாலும், வயதை முகம் காட்டிக்கொடுத்து விடும் அல்லவா… அதை கேமராவும் காட்டிக்கொடுத்து விடும். அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறாராம் நயன்தாரா.

அவர் நடிக்க வந்து பதினான்கு வருடங்கள் ஆகும் நிலையில் தனக்கு எந்தநிலை விரைவில் வரக்கூடாது என பயந்தாரோ அது வந்தே விட்டது. அனேகமாக விரைவில் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.