படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படியா..? அதிர்ச்சியில் நயன்தாரா


நயன்தாரா தற்போது கதைக்கும் கதாநாயகி கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு ஊக்கம் தரும் வகையில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள், ரிலீசாவதற்கு முன்பே நல்ல விலைக்கு போகின்றன. அப்படிப்பட்ட நயன்தாராவையே சமீபத்திய நிகழ்வு ஒன்று அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விஷயம் இதுதான். மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் என்பவர். நடிகரான இவர், தற்போது இயக்குனராக மாறி இயக்கவுள்ள படம் தான் ‘லவ் ஆக்சன் ட்ராமா’ நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது சாட்சாத் நம்ம நயன்தாராவே தான்..

நிவின்பாலி-தயன்-வினீத் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தையும் அவரே தயாரிக்கிறார். ஏப்ரல் மாதம் துவங்குவதாக இருந்த இந்தப்படம் நிவின்பாலிக்கு காலில் காயம்பட்ட காரணத்தால் மே மாதம் துவங்க இருக்கிறது.

இந்தநிலையில் படப்பிடிப்பு துவங்குவதாற்கு முன்பே இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது பிரபல ஆசியாநெட் சேனல்.. அதுமட்டுமல்ல, இந்தபடம் ரிலீஸான பின்னால், 3௦ தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடினால், இப்போது பேசப்பட்டுள்ள தொகையை விட இன்னும் கூடுதலான தொகை கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். தான் ஷூட்டிங் போவதற்கு முன்பே தனது படம் இப்படி மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதை அறிந்துதான் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கிறாராம் நயன்தாரா..