முருகதாஸுக்கு நோ சொன்ன நித்யா மேனன்..!


நாம் தான் நடிப்பு புலி என்கிற நினைப்பு வந்துவிட்டால் போதும், சில நடிகைகள் பண்ணுகிற பந்தா காணவே சகிக்காது. அதிலும் மணிரத்னம் போன்றவர்கள் டைரக்சனில் நடித்துவிட்டால் போதும், அவர்கள் இன்னும் வேற லெவலுக்கு போய்விடுகிறார்கள். நித்யா மேனனும் அந்த லிஸ்ட்டில் தான் இருக்கிறார்.

தமிழில் அறிமுகமான சமயத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு, அதன்பின் தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் போய் ஒரு ரவுண்டு அடித்து அந்த இமேஜை மாற்றிவிட்டு மீண்டும் தமிழுக்கு வந்தார். மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தபின் அம்மணியின் நடவடிக்கைகள் அடியோடு மாறிவிட்டனவாம்..

எந்த அளவுக்கு என்றால் ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கவுள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க அழைப்பு விடுக்க, என்னால் முடியாது என மறுத்துவிட்டாராம்.. காரணம் அந்தப்படத்தில் பரினீதி சோப்ரா என்கிற இந்தி நடிகைக்குத்தான் முக்கியத்துவமான கேரக்டராம் அதனால் தான் முருகதாஸ், மகேஷ்பாபு என லெஜண்டுகள் நடிக்கும் படத்தை கூட தூக்கி எறிந்துவிட்டார் என்கிறார்கள்.