“சங்கடத்தை வான்டட் ஆக நாமே தேடிக்க கூடாது” ; கவுதம் கார்த்திக்கிற்கு தயாரிப்பாளர் அட்வைஸ்..!


சோஷியல் மீடியாவை பொறுத்தவரை அது பேஸ்புக்கா இருக்கட்டும், இல்லை டிவிட்டரா இருக்கட்டும்.. பிரபலங்கள் எல்லாம் ஏதாச்சும் பதிவை அப்டேட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. அதுல நிறைய ரசிகர்கள் ஏதாவது கமென்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.. தப்பித்தவறி அந்த கமெண்ட்டுகளை படிச்சிட்டா அவ்வளவுதான்.. கவுதம் கார்த்திக்கிற்கு வந்த சங்கடம் அந்த மாதிரித்தான்.

போன வாரம் கவுதம் கார்த்தி நடிச்ச இவன் தந்திரன் படம் ரிலீசாகி மூணுநாள் ஆகிரதுக்குல்லேயே தியேட்டர்காரங்க ஸ்ட்ரைக் ஆரம்பிச்சுட்டாங்க. இதனால நல்லா ஓடவேண்டிய படம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளானது.. நல்லவேளையா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனதும் இந்த வாரம் திரும்பவும் இந்தப்படத்தை ரிலீஸ் பண்றாங்க..

இந்த தகவலை டிவிட்டர்ல போட்டாராம் கவுதம் கார்த்திக். அதுக்கு ஒரு ரசிகர், அதான் தமிழ் ராக்கர்ஸ்லையே வந்திருச்சே.. அதுல பாத்துக்குறோம் என எகத்தாளமா பதில் கமென்ட் போட்டாராம். இதை சொல்லி வருத்தப்பட்ட கவுதம்கிட்ட, “எப்பவுமே நாம் ஸ்டேட்டஸ் போடுறதோட மட்டும் நிறுத்திக்கணும்.. அதுக்கு வர்ற பதில் கமெண்ட்டுகளை நாம் கண்டுக்கவே கூடாது.. அப்படி கண்டுக்கிட்டா இப்படிப்பட்ட சங்கடம்லாம் வரத்தான் செய்யும்”னு சொல்லி ஆறுதல் படுத்தினாராம் தயாரிப்பாளர் தனஞ்செயன்,