‘பாம்பு சட்டை’யை வைத்து சரத்குமாரிடமே ‘சதுரங்க வேட்டை’யாடும் மனோபாலா..!

‘சதுரங்க வேட்டை’ ஆடி ருசி கண்டுவிட்ட பூனை சும்மா இருக்குமா..? இதோ அடுத்ததாக இப்போது ‘பாம்பு சட்டை’படத்தை தயாரிப்பதன் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக பாலை குடிக்க தயாராகி விட்டது. ஆம். தயாரிப்பாளராக மனோபாலா தயாரித்துள்ள இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’. இந்தப்படத்தை ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் மனோபாலவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் 99 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் தான் இன்னும் எடுக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஆனால் இப்போது தான் வில்லங்கம் ஆரம்பித்துள்ளதாம்.. இந்தப்படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்க ஒப்புக்கொண்ட மனோபாலா கிட்டத்தட்ட இரண்டரை கோடி செலவில் முடித்துவிட்தாலும், சரத்குமார் தரப்பிலிருந்து நான்கரை கோடி ரூபாய் கறந்துவிட்டாராம்.

ஆனால் இப்போது மீதமுள்ள அந்த ஒரு பாடலை எடுக்கவேண்டுமானால் இன்னும் பத்து லட்ச ரூபாய் கொடுக்கவேண்டும் என மனோபாலா அடம்பிடிக்கிறாராம்.. ஆனால் மனோபாலா இப்படி பண்ணுவதன் காரணமே வேறு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அதாவது இந்தப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் பொதுவான நட்பு எல்லைக்குள் தான் சரத்குமாரும் மனோபாலாவும் இருந்தார்கள்.. ஆனால் நடிகர் சங்க .தேர்தல் விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தபோது விஷாலின் அணிக்கு தாவிவிட்டார் மனோபாலா.. இப்போது எதிரணி ஆளாக மாறிவிட்டதால் சரத்குமார் தரப்புக்கு இந்தவகையில் தன்னால் முடிந்தவரை சின்னதாக ஒரு டார்ச்சரை கொடுத்து விளையாடி பார்ப்போமே என்றுதான் சரத்குமாருடன் சதுரங்க வேட்டை ஆடிவருகிறாராம் மனோபாலா.