‘கோடீஸ்வர’ காதலருக்காக படி தாண்டிய ‘பிச்சைக்கார’ நாயகி..!


சசி இயக்கிய பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சாத்னா டைடஸ்.. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல பெயரும் கிடைத்து, படமும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டதால் ராசியான நடிகையாக மாறினார்.. இதனை தொடர்ந்து அவருக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நிறைய வாய்ப்புகள் தேடிவந்தன.

இதனால் சாத்னாவை விட சந்தோஷப்பட்டவர் அவரது அம்மா தான்.. தேடிவந்த படங்களுக்கு அட்வான்ஸை வாங்கிப்போட்டு கால்ஷீட்டுகளை தர ஆரம்பித்த அம்மாவின் சந்தோஷத்தில் சில மாதங்களுக்கு முன் இடியை இறக்கினார் சாத்னா.. ஆம்.. பிச்சைக்காரன் பட விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்தி என்பவருடன் காதல் வலையில் விழுந்தார் சாதனா.

சாத்னா நடிப்பதை விரும்பாத கார்த்தி, அவரை தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக மாற்றுவதாக வாக்களித்து, வாங்கிய படங்களுக்கான அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர வேண்டிய நிர்ப்பந்தத்தை அவரது அம்மாவுக்கு ஏற்படுத்தினார். இதனால் கோபமான அம்மா, கார்த்தியை இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின்போது இரண்டுமுறை கன்னத்தில் அறைந்தாராம்.

நிலைமை முற்றவே, வீட்டைவிட்டு வெளியேறிய சாத்னா, கார்த்தியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறாராம். இதனால் தனது மகளை மீட்டுத்தருமாறு சாதனாவின் அம்மா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.. ஆனால் நடிக்க விருப்பமில்லாததால் தானே சுயமாக முடிவெடுத்து வீட்டைவிட்டு வெளியேறியதாக சாத்னா கூறியுள்ளார்.. இன்னும் ஒரு வருடத்தில் கார்த்தியை திருமணம் செய்யப்போவதாகவும், அதற்குள் தனது தாயை சமாதானப்படுத்தி விடுவேன் என்றும் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார் சாத்னா..