திருமணத்தில் முடியுமா ‘பாகுபலி’ ஜோடியின் காதல்..?


‘பாகுபலி’ படத்தில் ஜோடியாக நடித்த அனுஷ்காவுக்கும், பிரபாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் புதிதாக தகவல் பரவி உள்ளது. அனுஷ்கா பாகுபலி படங்களுக்கு முன்பாக பில்லா, மிர்ச்சி ஆகிய படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்துள்ளார். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவருடன் நடிக்க தயார் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

பிரபாசுக்கு 37 வயது ஆகிறது. அவருக்கும் வீட்டில் பெண் பார்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவுக்கும் வயதாகி விட்டதால், திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், பாகுபலி படம் வெளியானதும் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம் பிரபாஸ், ராணா இருவரில் யார் ஆணழகன் என கேட்கப்பட்டது. யாரை அனுஷ்கா தேர்ந்தெடுப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, பிரபாஸ் தான் ஆணழகன் என கூலாக சொல்லி தனதுகாதலை மறைமுகமாக வெளிப்படுத்திவிட்டார் அனுஷ்கா. ஏதோ இந்த காதல் நல்லபடியாக கல்யாணத்தில் முடிந்து ஒரு புதிய ‘மகிழ்மதி’ ராஜ்யத்தை உருவாக்கட்டுமே..!