திரிஷா ராணாவை சேர்த்து விட்டுத்தான் மறுவேலை ; பாகுபலி ஹீரோ சபதம்


நடிகை த்ரிஷாவுக்கும் நடிகர் ரானாவுக்கும் காதல் என நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டது. அது உண்மையில்லை என நினைக்க தோன்றும் வகையில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அது நிச்சயதார்த்தத்துடன் முறிந்து போனது. தற்போது தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

தற்போது ரானாவுக்கும் இவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதானா, அதையும் தாண்டி இருவருக்குமிடையே காதல் இருக்கிறதா என்கிற குழப்பம் ரசிகர்களிடையே ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணா, பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டபோது, அங்கே திரிஷாவை பற்றியும் பேச்சு எழுந்தது.

அப்போது த்ரிஷா பற்றி கூறிய ராணா, “எனக்கும் திரிஷாவுக்கும் இருந்தது 10 ஆண்டுகால நட்பு. இடையில் கொஞ்ச நாள் அவருடன் டேட்டிங் சென்று கொண்டிருந்தேன் அதையும் விட்டு விட்டேன்” என கூறினார்.

உடனே இடைமறித்த பாகுபலி நாயகன் பிரபாஸ், திரிஷாவையும் ராணாவையும் கட்டாயம் சேர்த்து வைப்பேன் என சபதம் செய்தார் அதுமட்டுமில்ல இயக்குனர் ராஜமௌலி பேசும்போது, பிரபாஸுக்கு முன்பாக ராணா திருமணம் செய்வார் என அறுதியிட்டுக் கூறினார்