அவருக்கு எதிராக நான் கையெழுத்து போடுவேனா..? ; பதறும் பிரகாஷ் ராஜ்..!


கடந்த சில மாதங்களாக பிரகாஷ் ராஜ் அரசியல் ரேஞ்சில் தனது துணிச்சலான கருத்துக்களால் அதிரவைத்தது வருகிறார்.. குறிப்பாக ரஜினியின் அரசியல் வருகை, அரசியல் நிலைப்பாடு என தேவையில்லாத விஷயத்திலும் கூட மூக்கை நுழைத்து கருத்து சொல்லி வருகிறார்.

இந்தநிலையில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு எதிராக அவர் கையெழுத்து போட்டதாக ஒரு செய்தி வெளியானது.. உடனே பதறிப்போய்விட்டார் மனிதர்.. விஷயம் இதுதான். கேரள அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்துகொள்ள இருக்கிறார் என சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சாராரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதற்கு மோகன்லால் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பு . திலீப்பை அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் முடிவை எடுத்தார் என்பதற்காகத்தான் மோகன்லாலுக்கு இந்த எதிர்ப்பை காட்டுகிறார்கள்..

இது தொடர்பாக திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட சுமார் 107 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கேரள முதல்வருக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமாக நடிகர் பிரகாஷ் ராஜூம் கையெழுத்திட்டுள்ளார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

“மோகன்லாலுக்கு எதிராக நான் எப்படி கையெழுத்து போடுவேன்.. அவர் ஒரு லெஜண்ட்.. நம் நாட்டின் சொத்து.. இப்படி ஒரு விஷயமாக யாரும் என்னிடம் எந்த தொடர்பு கொள்ளவே இல்லை.. அதுமட்டுமல்ல இந்த விழா குறித்தும் எனக்கு தெரியாது ” என கூறியுள்ள பிரகாஷ்ராஜ் இந்தவிஷயத்தில் தான் எப்போதும் மோகன்லால் பக்கம் தான் என கூறியுள்ளார்.

மோகன்லாலுடன் இணைந்து ‘ஒடியன்’ என்கிற படத்தில் சமீபத்தில் தான் பிரகாஷ்ராஜ் நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது