தயாரிப்பாளர்களை அலறவைக்கும் ப்ரியா ஆனந்தின் ராசி..!

தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவ, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் மட்டும் சிவகார்த்திகேயன் புண்ணியத்தில் தப்பித்தது.

அதன் பிறகு வணக்கம் சென்னை,180, அரிமா நம்பி, இரும்புக் குதிரைகள், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என இவர் நடித்தத்தில் அரிமா நம்பி மட்டும் பரவாயில்லை.. மற்றதெல்லாம் அட்டர் பிளாப்.. இவர் தனியாக நடிக்கும் காட்சியை மட்டும் எடுத்து போட்டுப்பார்த்தால் அது எந்தப்படம் என்று சொல்லமுடியாது.

அந்த அளவுக்கு, எப்போதும் ஒரேமாதிரி, மைதா மாவு பொம்மை போல எக்ஸ்பிரஷன் காட்டும் இவரை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எப்படி ஒகே பண்ணுகிறார்கள் என்பது எட்டாவது உலக அதிசயம். இப்போது, போனால் போகிறதென்று அரிமா நம்பி இயக்குனர் இயக்கும் அடுத்த படத்திலும், அசோக் செல்வன் நடிக்கும் படத்திலும், மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவரது வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் இவர் பல மேனேஜர்களை பகைத்துக்கொண்டதுதான். அதாவது கௌதம் கார்த்திக், அதர்வா ஆகியோரின் மேனேஜர்களை கழட்டிவிட்டு, தனது மேனேஜரையே அவர்களுக்கும் மேனேஜராக மாற்றிவிட்டாராம். ஆனால் விக்ரம் பிரபு மட்டும் உஷாராக மேனேஜரை மாற்ற மறுத்துவிட்டாராம்.

ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வாக்கு இல்லையாம்.. அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்’ என ஒரு பழமொழி சொல்வார்கள்.. இவர் மேனேஜருனால இவருக்கே படத்தை கொண்டுவர முடியலையாம்.. இதுல மத்தவங்களுக்கு சிபாரிசு வேறயா என சக நடிகைகளில் பலர் சிரிக்கிறார்களாம்.. இவ்காரால் பாதிக்கப்பட்ட மேனேஜர்கள் ‘ப்ரியா ஆனந்த் ராசியில்லாதவர்’ என்கிற ரப்பர் ஸ்டாம்புடன் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார்களாம்.

ப்ரியா ஆனந்த் தமிழ் நடிகையாக இருந்தும் இவர் நடித்தால் அந்த படம் ஓடாது என்பதால் இவரை மனதில் வைத்து இப்போது இயக்குனர்களும் கதை எழுதுவதில்லை. அப்படியே எழுதி இவர்தான் வேண்டும் என சொன்னால், தயாரிப்பாளர்கள் பெரிய கும்பிடு போட்டு கதவை சாத்திவிடுகிறார்களாம்…