‘புலி’ படப்பிடிப்பில் வான்கோழியாக மாறிய மயிலு…!

சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் பலவருடங்களுக்கு பிறகு இங்கிருந்து பாலிவுட்டுக்கு பறந்துபோன பழைய மயில் ஸ்ரீதேவி மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அரசியாக ஸ்ரீதேவி நடிக்க அவரது மகளாக இளவரசியாக ஹன்சிகா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் உண்டு.

புலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால் விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறாரோ இல்லையோ, படத்தில் வேலைபார்த்த யூனிட் ஆட்கள் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்களாம். காரணம் கதாநாயகி படுத்திய பாடுதானாம்.. யாரு ஹன்ஷிகாவா..? ஸ்ருதியா என்றா கேட்கிறீர்கள்..? அவர்களெல்லாம் அழகு மயில்களாக வந்து பதவிசாக, பணிவாக நடித்துக்கொடுத்துவிட்டு போய்விட்டனராம்.

பந்தா காட்டியது நம்ம பழைய ‘மயிலு’ ஸ்ரீதேவிதானாம். வான்கோழி தான் மயிலு போல ஆட முயற்சிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் புலி படப்பிடிப்பு தளத்திலோ, இந்த மயிலு தான், வான்கோழியாக மாறி ஆட்டம் போட்டதாக சொல்கிறார்கள். படத்தின் ஹீரோ எப்போதுமே அனைவரையும் மரியாதையாக அழைக்கும் நபர். ஆனால் இந்த மயிலுவோ டாப் ரேங்க் டெக்னீசியன்கள் தவிர அனைவரையும் ஏக வசனத்தில் தான் அழைப்பாராம்.

அதுமட்டுமல்ல அவரது மகள்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் ஷூட்டிங்குக்கு டேக்காக விட்டுவிட்டு கேரவனுக்குள் போய்விடுவாராம். அவராக வந்தால் தான் ஆச்சு என்று புலம்புகிறார்களாம் அந்தக்கொடுமையை அனுபவித்தவர்கள். ஒருநாள் அவரது மகள்கள யாரோ ஒருவர் ஆர்வக்கோளாறில் செல்போனில் படம்பிடித்துவிட, அவரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய மயிலு, படத்தைவிட்டே கொத்தி, துரத்திவிட்டதாம்.

இதைவிட கொடுமை என்னவென்றால், மயிலு மேக்கப் போட்டுக்கொண்டு வருவதற்கே இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனது என்கிறார்கள் (பின்னே.. பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்துக்கொண்டுவர வேண்டாமா..) ‘ஐ’ படத்தில் அதுக்கும் மேல என விக்ரம் சொல்வாரே, அந்த மாதிரி, படத்தின் இரண்டு கதாநாயகிகளை விட மயிலுக்குத்தான் அதிக சம்பளமாம். அதுதான் இந்த ஆட்டம் என்கிறார்கள்.. படம் வரட்டும் அப்படி மயிலு என்னதான் ஆடியிருக்கிறது என தெரிந்துவிட்டு போகிறது.