அநாகரிகத்தின் மறு உருவமாக மாறிப்போன பச்சோந்தி ராதாரவி..!


ராதாரவி அருமையான குணச்சித்திர நடிகர்.. தனது படங்களில் வசனத்தாலும் பாடி லாங்குவேஜாலும் கைதட்டலை அள்ளுபவர்.. ஆனால் அது இயக்குனர்கள் சொல்லிக்கொடுத்த வசனங்களால் தான்.. ஆனால் பொதுமேடையை பொறுத்தவரை ராதாரவியின் பேச்சுக்கள் எல்லாம் நாராசமானவை.

அதிலும் கட்சிவிட்டு கட்சி தாவும் பழக்கம் கொண்ட ராதாரவியின் நாக்கு எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சமயத்திற்கு ஏற்றார்போல பேசக்கூடியது.. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவியபின், தற்போது மேடைதோறும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அடாவடியாக நா கூசும் வார்த்தைகளை பேசி வருகிறார் ராதாரவி.

சமீபத்தில் ரஜினியை பற்றி ஒரு கூட்டிடத்தில் பேசியபோது சுற்றி இருந்த திமுக கட்சிக்காரர்களே முகம் சுழித்தார்கள்.. இத்தனை நாட்கள் உடனிருந்து பழகிய ரஜினியை இப்படி கேவலமாக விமர்சிக்கிறாரே என கட்சியிடம் இதுபற்றி கேட்டால், காசு கொடுத்தாள் ராதாரவி சொந்த குடும்பத்தையே அசிங்கமாக பேசக்கூடியவர்” என சொல்லி சிரிக்கிறார்கள்..

நடிகர்களுக்கு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு குறைந்துவருவது இவர்போன்ற சில்லுண்டி நடிகர்களால் தன எனவும் திரையுலகினர் நொந்துகொள்கின்றனர்.