புரட்சி செய்ததால் பிரபுவுக்கு வந்த புது சிக்கல்..!


இன்னொரு சுதந்திரம் கிடைப்பதற்கு வித்திடும் புரட்சி எதையும் செய்து அரசின் கோபப்பார்வையில் எல்லாம் நம்ம இளையதிலகம் பிரபு சிக்கவில்லை… கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்காக ‘புரட்சி.. புரட்சி’ என நரம்பு புடைக்க கத்தி, தமிழர்கள் பலரையும் ஒன்றுதிரட்டி தங்கநகை வாங்க கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு அழைத்து வந்தாரே அந்த விஷயத்தில் தான் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளார் பிரபு.

கோவை கல்யாண் ஜுவல்லர்ஸில் நகைவாங்கப்போன தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தான் வாங்கிய நகையில் இரும்புக்கம்பியை .கலந்து தங்கமுலாம் பூசி கொடுக்கப்பட்டிருக்கும் மோசடியை கண்டுபிடித்தாராம். இது குறித்து கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் நியாயம் கேட்கப்போனபோது, உணமையை ஒப்புக்கொள்ளாமல், பணத்தையும் திருப்ப்பித்தராமல் உன்னால் ஆனதை பார்த்துக்கொள் என விரட்டிவிட்டார்களாம்.

இப்போது இந்த பிரச்சனையை பெரியார் அமைப்பு கையில் எடுத்துலதாம். நடிகர் பிரபு இந்த கடையை பற்றி சொன்னதால் தானே நாங்கள் நம்பி நகைகளை வாங்கினோம்.. இப்போது இவர்கள் மோசடி செய்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளதால், இதை விளம்பரப்படுத்திய பிரபுவும் இதற்கு முக்கிய பொறுப்பாகிறார்..

எங்களை நம்பவைத்து ஏமாற்றிய பிரபு இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அவர் மீது வழக்கு தொடரப்போகிறோம் என்றும் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஏற்கனவே இந்தி நடிகர் அமிதாப் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி மீதும் இதுபோன்ற வேறு பொருட்களை விளம்பரப்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.