முதல் தடவையா நான் நல்லவன்னு சொல்லிட்டாங்க ; உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா


டைரக்ஷனில் இருந்து எப்போதோ ஒதுங்கிவிட்ட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்கேற்றார்போல் அவரையும் கதாநாயகனாக வைத்து படம் எடுக்க நல்ல கதையம்சத்துடன் இயக்குனர்கள் பலர் தயாராக இருக்கின்றனர்.

அப்படி உருவாகி வந்த ஒரு படம்தான் மான்ஸ்டர். மாயா மாநகரம் ஆகிய படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் சினிமா நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஒருநாள் கூத்து என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா இதுவரை நான் நடித்த எந்த ஒரு படத்திற்கும் யூ சான்றிதழ் கிடைத்தது இல்லை.. என் வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக எனது படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.