சந்தானத்தை அட்டாக் பண்ணிய ‘சிங்கம்புலி’ இயக்குனர்..!

இயக்குனர் சிங்கம்புலி இப்படி சக போட்டியாளரை அட்டாக் பண்ணி பேசமாட்டாரே என்று தானே நினைக்கிறீர்கள்..? அது உண்மைதான். அட்டாக் பண்ணியது வேறு நபர்.. அது யாரென்று பார்ப்பதற்கு முன் முதலில் எங்கே பேசினார் என பார்த்துவிடுவோம். பிரேம்ஜி கதாநாயகனாக ‘மாங்கா’ என்கிற படத்தில் நடிக்கிறார் இல்லையா..?

சில தினங்களுக்கு முன் அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை காமராஜர் அரங்கத்தில் பல வி.ஐ.பிக்களை வரவழைத்து பிரமாண்டமாக நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான சக்திவேல். அதில் கலந்துகொண்டவர்களில் இயக்குனர் சாய்ரமணியும் ஒருவர். இவர்தான் ஜீவா இரண்டு வேடங்களில் நடித்த ‘சிங்கம் புலி’ படத்தின் இயக்குனர். (விடை கிடைத்துவிட்டதா?).

விழாவில் சாய்ரமணி பேசும் முறை வந்தபோது, பிரேம்ஜியை ஓவராக பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, அல்லது சந்தானத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவோ “லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் தான் காமெடி பண்ண முடியுமா? சாதாராண நடிகர்களாலும் காமெடி பண்ண முடியும்” என்றார். அவர் குறிப்பிட்டது சூரியாகவோ, வேறு யாராகவோ ஏன் இருக்கக்கூடாது என நீங்கள் நினைக்கலாம்.

அதற்கும் காரணம் இருக்கிறது.. சந்தானம் டெவலப் ஆகிக்கொண்டிருந்த சமயத்தில் தான் இயக்கிய ‘சிங்கம் புலி’ படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் ஒன்றை கொடுத்தார் சாய்ரமணி. இன்றும் கூட அந்தப்படத்தின் காமெடியை அடிக்கடி டிவியில் ஒளிபரப்பும் அளவுக்கு சந்தானத்தை ஜனங்களிடம் ரீச் பண்ணியது அந்தப்படம்.

ஆனால் தற்போது தனது புதிய படத்திற்காக சந்தானத்தை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிடலாம் என நினைத்து போனவருக்கு சந்தானம் பெப்பே காட்டியுள்ளார். காரணம் நட்புக்காக சம்பளத்தை குறைக்க சொல்லிவிடுவாரோ என்கிற பயம் தான். அந்த கடுப்பில் தான் சந்தானத்தை மேடையில் மறைமுக அட்டாக் பண்ணினாராம் இயக்குனர் சாய்ரமணி.