அரண்மனை 3 படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால்!


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவும் நாயகியாக ராசிகளாகும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆண்ட்ரியாவும் நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சாக்‌ஷி அகர்வாலும் இத்திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதத்தில் துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.