தெலுங்குல சான்ஸ் வந்தா தமிழை அப்படியே விட்டுட்டு ஓடுவாராம் சமந்தா..!

பேட்டில பேசுனாலும் சரி.. டிவிட்டருல பேசுனாலும் சரி.. கவனமா வார்த்தைகளை விடணும்.. ஆனா இந்த சமந்தாவுக்கு எங்கே அதெல்லாம் தெரியுது..? தன்னோட ட்விட்டர் பக்கத்துல தனது ரசிகர்களோட உரையாடல் நடத்துன சமந்தாகிட்ட, ரசிகர்களில் சிலர் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுருக்காங்க..

அதுல ஒருத்தர் தெலுங்குல மகேஷ்பாபு, பவன் கல்யாண் பட வாய்ப்பு தேடிவந்தா என்ன செய்வீர்கள்னு கேட்டாரு. அதுக்கு இந்தம்மா,, “இரண்டு படங்களையும் ஏற்றுக்கொள்வதற்காக இதுக்கு முன்னாடி ஒத்துக்கிட்ட படங்களை தூக்கிப்போட்டுவிட்டு அங்கே ஓடிவிடுவேன்”னு சொல்லிருக்கார்..

இவர் சொன்ன இதே வேலையைத்தான் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பண்ணினார்.. வேறென்ன, கார்த்தி படத்துல ஒப்பந்தமான ஸ்ருதிக்கு, அஜித் பட சான்ஸ் கிடைச்சதும் சொல்லாம கொள்ளாம அங்கே ஓடிட்டாரு.. அந்த கம்பெனி கேஸ் போட்டப்ப கூட, கமல் மகள் அப்படிங்கிறதால பிரச்சனை பெருசாகாம சரிக்கட்டிட்டாங்க..

இப்ப இதே மாதிரி நானும் பண்ணுவேன்னு சமந்தா வாயை விட்ருக்கார். அப்படி நடந்தா சமந்தாவுக்கு கைகொடுக்குறதுக்கு ஆள் யாரும் இல்லை. அதேசமயம் உண்மை நிலவரம் என்னன்னா, இப்ப தெலுங்குல ராம்சரண் படத்துல அதாவது தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குல நடிக்க சமந்தாவ கூப்பிட்டாங்களாம்..

ராம்சரணோட நடிக்க ஆசைன்னாலும் கைவசம் தேதி இல்ல சமந்தாகிட்ட. அதுமட்டும் இல்ல, இப்ப நடிச்சுட்டு இருக்கிறது மகேஷ்பாபு படம். சமந்தாவோட ஜம்பம் அங்கே பலிக்காது.. அதனால ஸாரி.. என்கிட்டே கால்ஷீட் இல்லைன்னு வருத்ததோட சொல்லி அனுப்பிட்டாராம் அம்மணி.