முறையாக கணக்கு காட்டாத சரத்குமார் ; சட்டப்படி நடவடிக்கைக்கு தயாராகும் நடிகர்சங்கம்..!


நடிகர் சங்க தேர்தலில் தோற்றபின்னர் சில நாட்களிலேயே நடிகர்சங்க கணக்கு விவரங்களை ஒப்படைத்து விடுவதாக கூறிய சரத்குமார், அதன்படி கணக்குகளை ஒப்படைக்கவும் செய்தார்.. இந்த இரண்டு மாத இடைவெளியில் பழைய கணக்கு வழக்குகளை ஆராய்ந்ததில் பல செலவுகளுக்கு ரசீதுகள் இல்லாமலும், அதேசமயம் தேவையில்லாமலும் செய்யப்பட்டு அவை செலவு கணக்கில் காட்டப்பட்டிருந்தனவாம்..

குறிப்பாக சொல்லப்போனால் முறையான கணக்கு வழக்குகளை சரத்குமார் ஒப்படைக்கவில்லை என தற்போதைய பொறுப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது தொடர்பாக இரண்டு முறை சரத்குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

இதனால் பொதுக்குழுவை கூடிய நாசர் அன் கோ, சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கை என சரத்குமாரும், ராதிகாவும் புலம்பல் அறிக்கை விடுவதற்கு பதிலாக, கணக்குகளை ஒப்படைப்பார்களா, அல்லது விளக்கம் சொல்வார்களா என நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.