“ஷக்தி ஒரு போன்சாய் மரம் ; பரணியின் நக்கல்”


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறியவர் நடிகர் பரணி. இல்லையில்லை மற்றவர்கள் டார்ச்சர் தாங்காமல் வெளியேற்றப்பட்டவர்.. சமீபத்தில் அவரை சந்தித்த மீடியா ஒன்று அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றவர்களை பற்றி பரணியிடம் கருத்து கேட்டது.

அதற்கு ஒரே வரியில் ஒவ்வொருவரை பற்றியும் சொல்லி வந்த பரணி, நடிகர் சக்தியை பற்றி கேட்டபோது, “வீட்டுகுல்ளேயே வச்சு தொட்டியிலே வளர்ப்பாங்க பாருங்க.. (போன்சாய் மரம்) அதுனால பெரிசா வளரவே முடியாதுல்ல.. அதுதாங்க இந்த ஷக்தி” என குறிப்பிட்டார். அதாவது ஷக்தி ரொம்பவும் குறுகிய மனம் கொண்டவர் என்பதைத்தான் அப்படி நக்கலாக குறிப்பிட்டுள்ளார் பரணி..