தொழிலாளிகள் எதிர்ப்பை கண்டு பணிந்தார் ஷங்கர்..!


இயக்குனர் ஷங்கரைப்பற்றித்தான் நமக்கு தெரியுமே.. ஒவ்வொரு படம் முடிகிற வரையும் தனது படம் சம்பந்தமான எந்த விஷயங்களையும் வெளியே கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதற்காக பல கெடுபிடிகளையும் அரங்கேற்றுவார்.. படப்பிடிப்பில் பௌன்சர்கள் எனப்படும் குண்டர்களையும் இதற்காக பணியமர்த்திக்கொள்வார்.

இப்போது ரஜினியை வைத்து அவர் இயக்கிவரும் 2.O’ படப்பிடிப்பு தளத்திலும் இந்த கெடுபிடி முன்னைவிட இரண்டு மடங்கு அதிகமாகி இருக்கிறது.. படப்பிடிப்புக்கு வரும் தொழிலாளர்களை சோதனைசெய்தபின்பு தான் வெளியே அனுப்புகிறார்களாம். இதனால் டென்சனான தொழிலாளிகள் எதிர்ப்புக்குரல் கொடுக்க, நிலைமை மோசமாவதைக்கண்டு இப்போது சோதனை செய்ய வேண்தாம் என கூறியுள்ளார்களாம்.