பினிஷிங் டச் கொடுக்க புது ஆளை பிடித்துவிட்டார் சிம்பு..!


பாடல் காட்சியை எடுத்து படத்தில் சேர்த்துவிட்டு, அதன்பின்னர்தான் ‘இது நாம ஆளு’ படத்தை ரிலீஸ் பண்ணுவேன் என பிடிவாதமாக நிற்கிறாராம் சிம்பு. எண்ணமோ அந்த ஒரு பாட்டு இல்லையென்றால் படம் ஓடாது போலவும் படத்திற்கு ரசிகர்கள் வரமாட்டர்கள் போலவும் அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் இந்தப்பட வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.

நயன்தாரா முடியாது என்று சொல்லிவிட, ஆண்ட்ரியாவை வைத்து எடுக்கலாம் என முயற்சித்தார்கள்.. அதுவும் செட்டாகாமல் போக இப்போது ஆடா சர்மா என்கிற வடக்கத்தி நடிகையை வரவழைத்து ஆடவைக்கப்போகிறார்களாம். 780 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா இந்த எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுதுன்னு விநியோகஸ்தர்கள் தரப்புல நக்கலா பேசிக்கிறாங்களாம்.