நயன்தாரா பற்றி விஷ்ணுவர்தன் சொன்னது சிம்பு படத்துக்கு உதவுமா..?

பொதுவாக நயன்தாராவை இயக்குனர்களின் நடிகை என்றுதான் சொல்வார்கள்.. சம்பள விஷயத்தில் தான் கறாராக இருப்பாரே தவிர, ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அந்தப்படத்தின் இயக்குனர் எதிர்பார்த்தபடி நடித்துக்கொடுப்பது, கால்ஷீட் சொதப்பாமல் ஷூட்டிங் வருவது என நயன்தாரா ஒரு பக்கா ஜென்டில்வுமன் என்பதுதான் அவரை வைத்து படம் இயக்கியவர்களின் கருத்து.

அவரை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட இதே விதமான கருத்தை தான் சொல்கிறார். “ஒரு படத்துல் நயன்தாரா கமிட் ஆகிட்டா அந்தபடத்து மேல ரொம்ப கேர் எடுத்துக்குவாங்க.. அந்தப்படத்துக்கு சிக்கல் வந்தா அதெப்படி விட முடியும்.. நான் தயாரிப்பாளர்கிட்ட பேசுறேன்னு மெனக்கேடுவாங்க”ன்னு நயன்தாராவுக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கார் விஷ்ணுவர்த்தன்.

இந்த பாயிண்ட்படி பார்த்தால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொஞ்ச நாட்கள் தாமதமானதால் தன்னுடைய கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என நயன்தாரா அந்தப்படத்தில் நடிக்க மறுக்கிறாரமே அது உண்மையா..?

இல்லை.. இன்னும் 50 லட்சம் வைத்தால் தான் எக்ஸ்ட்ரா கால்ஷீட் தருவேன் என்கிறாரே அது உண்மையா..? இல்லை.. ஒரு படம் நிற்க கூடாது என்கிற நினைப்புள்ள நயன்தாரா, தனது பிடிவாதத்தை மாற்றி விஷ்ணுவர்த்தன் சொன்னதுபோல இந்தப்படமும் பிரச்சனையின்றி வெளிவர உதவுவாரா..? நயன்தாராவுக்கே வெளிச்சம்..