சிம்புகிட்டே கேளுங்கப்பா.. அம்பை திருப்பிவிட்ட பாண்டிராஜ்..!

சென்னை டூ நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரைய தாண்டுனதும் திடீர்னு ஒருத்தர் ‘பாஸ் அரியலூர் வந்துருச்சா’ன்னு கேட்டா எப்படி இருக்கும்..? அப்படித்தான் டைரக்டர் பாண்டிராஜோட நிலைமையும் ஆகிப்போச்சு.. அவருக்கு பிரச்சனை ஒண்ணும் இல்ல.. ஆனா கேக்குறவனுக்கு பதில் சொல்லி தாவு தீர்ந்து போச்சு பாண்டிராஜூக்கு..

அவர் டைரக்ட் பண்ணி ரிலீஸுக்கு தயாரா இருக்குற ‘பசங்க-2’ பத்தின அப்டேட் விஷயங்களா அப்பப்ப டிவிட்டர்ல சொல்லிட்டு வர்றாரு… இந்த நேரத்துல சிம்பு ரசிகருங்க உள்ளே வந்து, “சார் எப்ப சார் எங்க ‘வாலு’(சிம்பு) படம் (இது நம்ம ஆளு) ரிலீசாகும்னு சைடு ட்வீட் போட்டுக்கிட்டே இருந்தாங்க..

கொஞ்சநாள் அமைதியா இருந்தவரை, என்ன பதில் சொல்லாம போறீங்கன்னு சீண்டுனாங்க அந்த விடலைங்க.. ஒரு கட்டத்துல, “தம்பிகளா.. ஒரு டைரக்டர் சைடுல இருந்து பண்ணவேண்டிய வேலையெல்லாம் நான் பண்ணி முடிச்சு கொடுத்துட்டேன்.. ஒரு தயாரிப்பாளரா அவங்க என்ன பண்ணப்போறாங்கன்னு நானும் காத்துக்கிட்டு தான் இருக்கேன்.. நீங்க அங்க கேட்டுப்பாருங்க தம்பி”ன்னு அம்பை சிம்பு பக்கமா திருப்பி விட்டுட்டாரு..

ஏம்ம்ப்பா.. அவரு சிம்பு படத்தை முடிச்சு, சூர்யா படத்தை முடிச்சுட்டு, இப்போ விஷால் படத்தையும் முடிக்கிற ஓரத்துல இருக்காரு.. அனேகமா அடுத்த மாசம் இன்னொரு ஹீரோகிட்டே அட்வான்ஸ் வாங்கினாலும் வாங்கிருவாரு.. அவர் ஜெட் வேகத்துல மதுரைய தாண்டி போயிட்டாரு.. இப்ப போய் அவருகிட்ட அரியலூர் வந்துருச்சான்னு கேட்டா சிரிப்பா இல்லையா தம்பிகளா..?