ஆளை விடுங்கடா சாமி ; வெறுத்துப்போய் வெளியேறிய சிம்பு..!


ஊர்ல இருக்கிரவநேல்லாம் ட்வீட் போடுறான்.. அப்பெல்லாம் கம்முன்னு இருக்கிறீங்க.. ஆனா நான் ஏதாவது சொன்னா மட்டும் அம்புட்டு பேரும் வரிஞ்சு கட்டிட்டு வர்றாய்ங்க என புலம்பிக்கொண்டிருந்த சிம்பு, போங்கடா நீங்களும் உங்க சோஷிய மீடியாவும் என பெரிய கும்பிடாக போட்டுவிட்டு சோஷியல் மீடியாவை விட்டு வெறுத்துப்போய் வெளியேறி இருக்கிறார்.

அதற்கு அவர் என்ன காரணம் சொல்லி இருக்கிறார் தெரியுமா..? “எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.

ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்” என கூறியுள்ளார்.. பயபுள்ளைக அவரை ரொம்பத்தான் காயப்படுத்திட்டாங்க..