படம் கொடுக்க ஆளில்லாததால் சிம்பு எடுத்த விசித்திர முடிவு..!


சிம்புவை வைத்து படம் எடுப்பதும் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பதும் ஒன்றுதான் என்கிற மாதிரி திரையுலகில் ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. சமீபத்தில் அவரை வைத்து ‘அஅஅ’ படத்தை எடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் நிலையை பார்க்கும்போது அந்த பேச்சு உண்மைதான் என மீண்டும் உறுதியாகி உள்ளது..

சிம்பு இதைவிட கேவலமாக ஒரு படத்தில் நடித்திருக்க முடியாது என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.. விமர்சகர்களை விடுங்கள்.. சிம்பு ரசிகர்களே என்ன கொடுமை ஸார் இது என்றபடியே தியேட்டர்களை விட்டு வெளியேறிய காட்சிகளையும் பார்க்க முடிந்தது.. இதனால் சிம்புவை வைத்து புதிதாக படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்கிற நிலை உருவாகியுள்ளதாம்.

இதனால் சிம்பு ஒரு விசித்திரமான முடிவுக்கு வந்துள்ளாராம். சில வருடங்களுக்கு அதாவது ஆறேழு வருடங்களுக்கு முன் சிம்பு தானே இயக்குவதாக ‘கெட்டவன்’ என்கிற படத்தை துவக்கினார். அல்லவா.? வழக்கம்போல அதை ஆரம்பித்த சில நாட்களிலேயே கை கழுவி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார்..

இப்போது வேறுவழியின்றி அந்த படத்தை எடுத்து மீண்டும் தூசி தட்டும் வேலைகளில் இறங்கியுள்ளாராம் சிம்பு. அதில் நமீதா, சந்தானம் போன்றவர்கள் எல்லாம் நடிப்பதாக இருந்தது.. இப்போது வேறு நட்சத்திரங்களை மாற்றி இந்தப்படத்தை துவங்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.