அதிசயம் ; ஒரே பிறந்த தேதியை கொண்ட நண்பர்கள் வாக்களிப்பதில் ஏற்பட்ட சிக்கல்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தேர்தல் நாளான நேற்று ஓட்டு போடுவதற்காக தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு போட பெயர் இருந்துள்ளது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை இதனால் அவரால் ஓட்டு போட முடியவில்லை.

அதன்பின்னர் அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் ஓட்டுச்சாவடியில் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று அவர் வாக்களித்தார். வாக்களித்த பிறகு கையில் மையுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதேபோல விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி என்கிற டிடி இதேபோல போராடி தனது ஓட்டினை பதிவு செய்துள்ளார். அவருடைய வாக்குச்சாவடியில் பெயர் இல்லாத காரணத்தினால் காலை 8 மணியிலிருந்து போராடி பெயரைக் கண்டுபிடித்து பின்னர் தான் வாக்களித்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரே பிறந்த தேதியை கொண்ட, நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவருமே சொல்லி வைத்தாற்போல நேற்று ஓட்டுப்போடுவதில் சிக்கல்களை சந்தித்தது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.