அப்பா விக்ரம் குறித்து மகன் துருவ் பெருமிதம்


நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆதித்ய வர்மா. பலர் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்க இவர் ஒரு பெரிய நடிகரின் மகன் என்பதால் மிக எளிதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஒரு விமர்சனம் உள்ளது.

இது பற்றி துருவ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “என் அப்பா 10 வருடம் இந்த துறையில் போராடிய பிறகு தான் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சேது வெளியான நேரத்தில் நான் குழந்தை. அந்த வயதிலும் அவர் போராடி ஜெயித்தார். ஆம் எனக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது தான். ஆனால் அவரது மகன் என்பதால் பல மடங்கு பொறுப்பு அதிகரித்துள்ளது.”

அவர் 10 வருடங்கள் போராடினார்.. அந்த நேரத்தை நானும் வீணடிக்காமல் செய்துள்ளார். அவரை போல என்னால் அர்ப்பணிப்போடு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. பல படங்களுக்காக அவர் உடல் எடையை குறைத்து/அதிகரித்து நான் பார்த்திருக்கிறேன். அவரை போல என்னால் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை” என துருவ் தெரிவித்துள்ளார்.