ஏற்கனவே புகையும் நெருப்பை தேவையில்லாமல் ஊதிவிடும் சௌந்தர்யா..!


ஆமை புகுந்த வீடும் அமலாபால் புகுந்த இடமும் உருப்படாது என சோஷியல் மீடியாவில் பலரும் பழமொழி போலவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அமலாபால் அவரது கணவரை விட்டு பிரிந்து வந்தால் அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்கு காரணமாக சொல்லப்பட்டவரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிப்பதை பற்றி என்ன சொல்ல..?

தற்போது தனுஷ் நடிக்கவுள்ள வி.ஐ.பி-2 ஆம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் அமலாபால்.. இத்தனைக்கும் தனுஷின் கொழுந்தியாளான சௌந்தர்யா இயக்கும் படம் தான்.. ஏற்கனவே அமலாபாலால் தனது அக்கா ஐஸ்வர்யா-தனுஷ் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வந்தநிலையில் ஏற்கனவே புகையும் தீயை தேவையில்லாமல் ஊதிவிடும் வேலையைத்தான் சௌந்தர்யா செய்து வருகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.