சுப்ரமணியப்புரத்தை மீண்டும் இணைக்கும் இயக்குனர்!!!!

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த திரைப்படங்களில் “சுப்ரமணியபுரமும்” ஒன்று. இந்த திரைப்படம் கோலிவுட்டில் அதற்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.

ஜெய், சமுத்திரகனி மற்றும் சசிகுமாருக்கு ஒரு ஆரம்பமாக அமைந்த படம் என்றும் கூறலாம்.
சமுத்திரகனி தற்போது “கிட்னா” என்ற படத்திலும்,பாலா இயக்கும் “தார தப்பட்டை” திரைப்படத்தில் சசிகுமாரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் .

ஜெய் நடிக்கும் “வலியவன்” திரைப்படம் வெளியான பிறகு இவர்கள் (ஜெய், சமுத்ரகனி, சசிகுமார்) மறுபடியும் இணைய உள்ளனர். இந்த திரைப்படத்தை “ஜில்லா” நேசனின் அசிஸ்டன்ட் “வசந்த மணி” இயக்க உள்ளார்.

இது இயக்குனர் வசந்த மணிக்கு முதல் திரைப்படம்.