சூர்யாவை பொதுமேடையில் அப்செட்டாக்கிய ரசிகர்கள்


முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்கள் பலம் தேவைதான்.. அதை யாரும் மறுக்க உடியாது.. ஆனால் அதுவே தேவையில்லாத தொல்லையை கொண்டுவரும் என்றால் ரசிகர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதிரடியாக உத்தரவுகளை இடவேண்டும்..

நடிகர் சூர்யாவுக்கு இதுபோன்ற சங்கடம் சமீபத்தில் ஏற்பட்டது. சமீபத்தில் சத்யம் திரையரங்கில் ஒரு குறும்பட விழாவில் கலந்துகொண்டார் சூர்யா.. அங்கே சூர்யாவின் ரசிகர்களும் நூற்றுக்கணக்கில் வந்திருந்தனர். எப்பொதெல்லாம் சூர்யாவின் பேரை யார் சொன்னாலும் அவர்கள் கோரஸாக குரல் எழுப்பி நிகச்சியை தொடர்ந்து நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தினர்..

சூர்யா மேடையேறி பேசவந்தபோது அவருக்கும் இதே நிலை ஏற்பட்டதுதான் ஆச்சர்யம்.. சூர்யா மைக்கை கையில் பிடித்தபடி இரண்டு நிமிடம் ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே டென்ஷனுடன் நின்றார். பின் ரசிகர்களை நோக்கி இது சரியில்லை.. நான் பேசட்டுமா வேண்டாமா என கோபமாக கேட்க, அதன்பின் தான் ரசிகர்கள் அமைதியானார்கள். இதை மேடையேறிய சில நொடிகளிலேயே சூர்யா சொல்லியிருக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.