ஜிகர்தண்டா நடிகர் மீது ‘திருட்டுப்பயலே’ இயக்குனர் கோபம்..!


ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு பாபி சிம்ஹாவுக்கு எந்தப்படமும் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.. அவர் ஹீரோவாக நடித்த ‘’ஆடாம ஜெயிச்சோமடா’, உறுமீன், கோ-2, இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து நடித்த பெங்களூர் நாட்கள், இறைவி, எப்போதோ துண்டு துக்கடா வேடங்களில் நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், மீரா ஜாக்கிரதை, என எல்லா படங்களும் அவரை நிறைய சொதித்துவிட்டன.

‘கவலை வேண்டாம்’ படத்தில் இரண்டாவது நாயகனாகவும் நடித்தார்.. அந்த ரூட்டும் பிடிபடவில்லை. ‘மெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்ததில் மட்டும் கொஞ்சம் பேர் கிடைத்தது. தனால் தான் திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரை கதையின் நாயகனாக ஆண்ட்டி ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார் சுசி கணேசன்..

ஆனாலும் தனது ஹீரோ வேல்யூவில் நம்பிக்கை வைக்காத பாபி சிம்ஹா ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம்.. இதனால் தனது படத்தில் அவர் ஏற்று நடிக்கும் ஆண்ட்டி ஹீரோ கேரக்டர் டம்மியாகிவிடுமே என கோபத்தில் இருக்கிறாராம் சுசி கணேசன்.