சூப்பர்ஸ்டாருடன் தொடர்ச்சியாக 3வது படத்தில் நடிக்கும் தேங்காய் சீனிவாசன் பேரன்


பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் அடுத்தபடம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார். இதில் தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிகர் ஆதித்யா இணைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே சூப்பர்ஸ்டாருடன் 2.0, பேட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தர்பார் படத்திலும் இணைந்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெய்ப்பூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 9ம் தேதி தர்பார் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.