கபாலியை தொடர்ந்து விஜய் படத்திற்கும் டைட்டிலை அபகரித்த தாணு..!

நடிகர்சங்க தலைவராக இருந்துகொண்டு சரத்குமார் ஆடாத ஆட்டங்களை எல்லாம் ஆடியதை பார்த்தோம். அதற்கு தேர்தலில் கிடைத்த தீர்ப்பையும் பார்த்தோம். இப்போது இன்னொரு ஏரியாவில், அதாவது தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்துகொண்டு கலைப்புலி தாணுவும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணிகொண்டு இருப்பதை பார்த்து பல தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் புலம்புகிறார்களாம்.

ஏற்கனவே ரஜினியை வைதத்தது தயாரித்து வரும் படத்திற்கு ‘கபாலி’ என்கிற டைட்டல் பொருத்தமாக இருந்ததால் அதை வேறொரு நபரிடம் இருந்து பிடுங்கி வைத்துக்கொண்டதாக தகவல் உலாவந்தது.. இத்தனைக்கும் அந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் கூட நடந்துவிட்டதாம். எப்படியோ அந்த இயக்குனரின் வாயை அடைத்துவிட்டாராம் தாணு.

ஆனால் இப்போது கலைப்புலி தாணு தயாரிக்கும் விஜய் படத்திற்கு ‘தெறி’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள் அல்லவா..? இந்த டைட்டிலையும் ஏற்கனவே சதீஷ்குமார் என்கிற இயக்குனர் தனது படத்திற்காக தேர்வுசெய்து, அதனை கடந்தமாதமே அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த டைட்டிலை முறைப்படி பதிவு செய்தும் வைத்திருக்கிறாராம்.

இப்போது அந்த டைட்டிலை விஜய் படத்துக்காக தாணு அபகரித்துகொண்டார் என்றும், சங்கத்தில் பெயர்ப்பதிவு புத்தகம் அவர் அதிகாரத்தின் வசம் இருப்பதால் அவரால் தனது இஷ்டப்படி தேதிகளை மாற்றிபோட்டு தனக்கு ஏற்ப வசதியாக தனது டைட்டில் போல மாற்றிக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார் சதிஷ்குமார்..

அதுமட்டுமல்ல என்னை கேட்டாலே கூட நானே கொடுத்திருப்பேனே. எதற்கு இந்த பித்தலாட்டம் என அழாத குறையாக புலம்பியுள்ளார். ஆனால் தாணுவுக்கு ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால், இது தொடர்பாக அவர் தாணு மீது வழக்கு எதுவும் தொடுக்கப்போவதில்லையாம்.