கவனிக்காமல் கழுத்தறுத்த எமி ; அப்செட்டில் ‘தெறி’ யூனிட்…!


இப்படியும் யாராவது ஒருத்தர் இருப்பாரா என விஜய்யின் ‘தெறி’ பட யூனிட்டே அங்கலாய்த்து கொண்டிருக்கிறதாம். ஒருபக்கம் விஜய்யும், இன்னொரு பக்கம் இயக்குனர் அட்லீயும் கன்னத்தில் கைவைக்காத குறையாக உட்கார்ந்துவிட்டார்களாம். இதற்கு காரணம் படத்தின் நாயகிகளில் ஒருவரான எமி ஜாக்சன் தானம்.

அப்படி என்ன செய்துவிட்டார் எமி என்று தானே கேட்கிறீர்கள்..? ‘தெறி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக திட்டமிட்டு விஜய்-எமி சம்பந்தப்பட்ட பாடல்காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்க முடிவுசெய்து செட் எல்லாம் போட்டு தயாராக வைத்திருந்தார்களாம்..

கடைசி ஷெட்யூல் படி, ஷூட்டிங்கிற்கு முதல்நாள் சென்னைக்கு வந்தாராம் எமி ஜாக்சன். ஆனால் ஏற்கனவே அவர் விசாவை நீட்டித்து புதுப்பிக்க வேண்டிய கால அவகாசம் முடிந்து விட்டதால் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளியேற முடியாமல் அப்படியே லண்டன் திரும்பி சென்று விட்டாராம். இனி அந்த நடைமுறைகளை சரிசெய்து விசாவை புதுப்பித்துக்கொண்டு வர சில நாட்கள் ஆகும் என்கிறார்கள். அவர் வந்தபின்னர் தான் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போல தெரிகிறது.