கதை புரியாமல் தான் மணியான இயக்குனர் படத்தில் இருந்து விலகினாராம் அந்த நடிகர்..!


இயக்குனர் மணிரத்னம் டைரக்சனில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இந்தப்படத்தை அறிவித்த சமயத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரில் கூட அவர் படம் இடம்பெற்று இருந்தது. ஆனால் கால்ஷீட் சிக்கல் காரணமாக அவர் விலகவே, அந்த கேரக்டரில் தற்போது அருண்விஜய் நடித்துள்ளார்.

ஆனால் இந்தப்படத்தில் இருந்து விலகியதற்கு கால்ஷீட் காரணம் இல்லை என தற்போது பஹத் பாசில் கூறியுள்ளார். இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை மணிரத்னம் பஹத் பாசிலிடம் சொன்னபோது அதை அவரால் மனதில் விஷுவலாக காட்சிப்படுத்தி பார்க்கமுடியவில்லையாம்.

இதுபற்றி சில நாட்கள் குழப்பத்திலேயே இருந்துவந்த பஹத் பாசில் கடைசியில் துணிந்து தனது முடிவை மணிரத்னத்திடம் சொன்னாராம். மணிரத்னம் தனது எண்ணத்தை புரிந்துகொண்டிருப்பார் என தான் நம்புவதாக கூறும் பஹத் பாசில், இதேபோல கடைசி நேரத்தில் முடிவெடுத்து சில படங்களில் இருந்து விலகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்