பாம்பு சட்டை’ இந்தவாரம் வெளியாகவிட்டால் காரணம் இதுவாகத்தான் இருக்கும்..!


நடிகர் பாபி சிம்ஹா எந்த நேரத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கினாரோ தெரியவில்லை.. பாவம் மனிதருக்கு அடுத்தடுத்த படங்கள் எதுவும் பெரிதாக பிரேக் கொடுக்கவில்லை.. இப்போது இன்னொரு சிக்கல் என்னவென்றால் அவர் நடித்த படங்கள் வெளியாவதிலும் பிரச்சனி நிலவுகிறது..

மனோபாலா தயாரிப்பில் ஆடம்தாசன் என்பவர் இயக்கத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ள பாம்பு சட்டை படம் திரைக்கு வர தயாராகி விட்டது. டிசம்பர் 30ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக கூறினாலும், விளம்பரங்களில் தேதியை குறிப்பிடாமல் விரைவில் பாம்புசட்டை வெளியாகிறது என்று மட்டுமே குறிப்பிட்டு வருகின்றனர்.

காரணம், இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து விட்டபோதும், சென்சார்போர்டு அதிகாரிகள் கத்தரிக்க சொன்ன சில காட்சிகளை அவர்கள் இன்னும் கத்தரித்து படத்தை மீண்டும் அவர்களது பார்வைக்கு அனுப்பவில்லையாம். அதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு காட்சியில் பாபி சிம்ஹா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். அதோடு, அந்த காட்சியை ஒரே ஷாட்டில் முடிக்காமல் பல ஷாட்களை வைத்து பில்டப் கொடுத்திருந்தது வேறு சென்சார் குழுவினரை எரிச்சலடைய வைத்ததாம்.

இதற்கு தணிக்கைக் குழுவினர் அதிருப்தி தெரிவித்து சில ஷாட்களை கத்தரிக்க சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சியாக கருதப்படும் அந்த நிர்வாண காட்சியை கத்தரித்தால் கதையின் முக்கியத்துவம் குறையும் என படக்குழுவுக்கு பலத்த யோசனையாக உள்ளதாம்.

அதனால் பாம்பு சட்டை படம் மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்படாததால் அவர்களது கைக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் வரவில்லையாம். அதனால் இந்த வாரம் ‘பாம்பு சட்டை’ வெளியாகவிட்டால் காரணம் இதுவாகத்தான் இருக்கும்..!